Thursday, April 16, 2026
HomeUncategorizedஎம்டன் போர்க்கப்பல் சென்னையில் குண்டு மழை பொழிந்த நாள் இன்று

எம்டன் போர்க்கப்பல் சென்னையில் குண்டு மழை பொழிந்த நாள் இன்று

எஸ்.எம்.எஸ் எம்டன் என்ற ஜெர்மனிய கடற்படையின் விசித்திர போர்க் கப்பல் 1914 ஆகஸ்ட் இறுதியில் சீனக் கடற்பகுதியில் தனது சாகசத்தைக் காண்பித்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது.

அதனுடைய திடீர் தாக்குதல் வியப்பானது. ஆங்காங்கு தனது கொடியை இடத்திற்கு தக்கவாறு மாற்றிக் கொண்டு அந்தந்த நாட்டு துறைமுகங்களில் தனக்கு வேண்டிய நிலக்கரி மற்றும் வேறு சாதனங்களைத் தந்திரமாகப் பெற்றது.

1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் இரவு 9.30 மணிக்கு ‘எம்டன்’ சென்னைக் கடற்கரையை நெருங்கி தனது பீரங்கிக் குண்டுகளை ஏவியது.

‘எம்ட’னிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான ‘பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்’, சென்னை உயர்நீதி மன்றம், ‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ போன்றவற்றில் வீழ்ந்து வெடித்தன. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments