1921’ஆம் ஆண்டு செப்டம்பரில் மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார் காந்தி. அப்போது மதுரையில் கூடிய எளிய மக்களும் விவசாயிகளும் மேலாடை அணியக் கூட வசதி இல்லாமல் வறுமையில் இருந்ததைக் கண்டார் அவர்.
தன் நாட்டு மக்களின் அன்றைய நிலையக் கண்டு வருந்திய காந்தி., நாடுமுழுமைக்கும் என்றைக்கு தம் மக்கள் மேலாடை அணியும் நிலை வருமோ அன்று வரை தானும் மேலாடை அணிவதில்லை என முடிவெடுத்தார்.
பிறகு வாழ்நாள் முழுக்க எளிய கதர் ஆடை தான் அவரது அடையாளமாகவே இருந்தது. ஆயிற்று இன்றோடு நூற்றி மூன்று ஆண்டுகள் ஆயிற்று

