Home Uncategorized ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய வாக்கிடாக்கி

ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய வாக்கிடாக்கி

லெபனான் தெற்குப் பகுதிகளிலும் தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லாவின் தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கிடாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், எத்தனை வாக்கி-டாக்கிகள் வெடித்தன என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.

மேலும், கிழக்கு லெபனானின் பல்வேறு இடங்களில் லேண்ட்லைன் தொலைபேசிகளும் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போதைய விசாரணைகளின்படி, கையால் பிடிக்கப்பட்ட வயர்லெஸ் ரேடியோ சாதனங்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு, பேஜர்கள் வாங்கிய அதே இடத்தில்தான் இவற்றையும் வாங்கியதாக

புது தகவல் வெளியாகி உள்ளது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 5 ஆயிரம் பேஜர்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர். தைவானை சேர்ந்த கோல்ட் அப்பலோ என்ற நிறுவனம், இந்த பேஜர்களை தயாரித்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version