தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து முதல்வராக கடந்த மே 7ஆம் தேதி ஸ்டாலின் பதவி ஏற்றார். தமிழ்நாட்டில் புதிதாக யார் முதல்வராக பதவியேற்றாலும், உடனே டெல்லி சென்று அப்போதைய பிரதமரைச் சந்தித்து தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து கோரிக்கைவைப்பது ஒரு நடைமுறையாக இருந்துவருகிறது.
ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று மிக அதிக அளவில் இருந்ததன் காரணமாக முதல்வர் ல்டாலின் டெல்லி செல்வது உடனடியாக நடைபெறவில்லை. ஆனால், விரைவில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
