பள்ளி பேருந்து பராமரிப்பு – முதன்மைக் கல்வி அலுவலகம் சுற்றறிக்கை
அனைத்து பள்ளி பேருந்துகளும் முறையாக பராமரிப்பதுடன், புதுப்பிக்கப்படாத பேருந்துகளை இயக்கக்கூடாது.
முறையான பயிற்சி பெற்ற, உரிமம் வைத்துள்ள நபர்களை ஓட்டுநர்களாக நியமிக்கவேண்டும்.
பேருந்துக்குள் மாணவர்களை ஏற்றும்போதும், இறக்கும்போதும் பேருந்தின் 4 புறமும் சரிபார்க்க வேண்டும்.
வேன்கள், ஆட்டோ மற்றும் ரிக்க்ஷாக்களில் வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

