கொரானா பரவலை தடுக்கும் விதமாக, வரும், 3ம் தேதி ஆடிப்பெருக்கு அன்று, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை உட்பட, முக்கிய படித்துறைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மலைக்கோட்டை தாயுமானவ ஸ்வாமி கோயில், வயலூர் முருகன் கோயில் உட்பட, திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரதான கோவில்களில் வரும், 2ம் ஆடி கிருத்திகை மற்றும் 3ம் தேதி ஆடிப்பெருக்கு நாட்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை- திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவிப்பு.

