இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், மிசோரம், கர்நாடகா, பிகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது.
ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க மத்திய உயர்மட்ட குழு வருகை தரவுள்ளதாகவும் அந்த குழுவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த தேவையான ஆலோசனைகளை மத்திய குழு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

